கோபி பற்றிய உண்மை தெரிந்த கையோடு ராதிகா என்ன செய்யப்போகிறார் என்பது குறித்து தெரிய வந்தது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இன்றைய எபிசோடில் குடித்து விட்டு வீட்டுக்கு வந்த கோபியிடம் உங்களது குடும்பத்தை காட்டுறதுல உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டார்.
அதன் பின்னர் வெளியான புரோமோ வீடியோவில் கோபி பாக்கியாவுடன் இருக்கும் போட்டோவை காட்ட அதிர்ச்சி அடைந்தார் ராதிகா. இந்த நிலையில் அடுத்து வரும் எபிசோடுகளில் குடித்துவிட்டு போன கோபியை பாக்கியா பார்த்துக் கொள்ள ராதிகா பாக்கியாவுக்கு போன் செய்து என்னை கல்யாணம் பண்ணிக்குவேனு சொன்னவரும் என்னை ஏமாற்றி விட்டார் என அழ பாக்கியா ஆறுதல் கூறுகிறார் என சொல்லப்படுகிறது. இது போன்ற காட்சிகள் தான் இந்த வாரம் ஒளிப்பரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.