கம்ப்யூட்டர் மாஸ்டர் கைது செய்யப்பட்ட நிலையில் பாக்கிய சொன்ன வார்த்தையால் பெற்றோர்கள் தலைகுனிந்து நின்றனர்.
Baakiyalakahmi Episode Update 05.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. கண்விழித்த நிகிதா பாக்கியா கம்ப்ளைண்ட் கொடுத்த தகவலை அறிந்து அவருக்கு நன்றி தெரிவித்தார்.
பிறகு மருத்துவமனைக்கு வந்த போலீசாரிடம் நிகிதாவின் பெற்றோரும் கம்ப்ளைன்ட் கொடுத்தனர். உன்னோட பெயர் வெளியே வந்து விடக்கூடாது என்றுதான் நாங்கள் பயந்தோம். சம்பந்தமே இல்லாத இன்னொரு பெற்றோர் கம்பெனி கொடுக்கும் போது நாங்க எதுக்கு பயப்படனும். தப்பு செஞ்ச அந்த ஆசிரியரை சீக்கிரம் அரஸ்ட் பண்ணுங்க என கூறினர். அதன்பிறகு போலீசார் கம்ப்யூட்டர் மாஸ்டர் ராஜ்குமாரை அரெஸ்ட் செய்தனர். டிவியில் இந்தச் செய்தியை பார்த்து மருத்துவமனையில் கூடியிருந்த அனைவரும் கைதட்டினர்.
அதன்பிறகு பாக்கியா வீட்டிற்கு வந்த பிறகு இந்தச் செய்தியைப் பார்த்து வீட்டில் உள்ளவர்களும் சந்தோஷம் அடைந்தனர். செழியன் மட்டும் இனிமேல் இதைப் பத்திப் பேச வேண்டாம் ஒரே இரிட்டேட்டிங்கா இருக்கு என டிவியை ஆப் செய்து விட்டு மேலே சென்று விட்டார். பிறகு கோபி செழியன் இனிய மற்றும் அவருடைய அம்மாவை அழைத்துக்கொண்டு வெளியே செல்கிறார்.
மறுநாள் காலையில் பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் அனைவரும் வரவழைக்கப்பட்டு போலீசார் அவர்களிடம் எதற்கும் பயப்படவேண்டாம் எதுவாக இருந்தாலும் எங்களிடம் தைரியமாக சொல்லலாம். அந்த கம்ப்யூட்டர் மாஸ்டர் கைது செய்யப்பட்டு விட்டார். பள்ளி முதல்வர் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இனிமே எந்த பிரச்சனையும் இருக்காது நீங்க எல்லோரும் நன்றாக படிக்கணும் என கூறுகிறார்.
பிறகு பாக்கியாவை அழைத்து அவருக்கு பாராட்டு தெரிவித்தார். அதன்பிறகு இனியாவின் தோழிகள் பாக்கியாவை ஓடி சென்று கட்டிப் பிடித்துக் கொண்டு எங்க வீட்டில் சொல்ல முடியவில்லை. நீங்க மட்டும் இல்லனா நிகிதாவை படிக்கலாம் என்று சொல்லித்தான் தற்கொலை செய்திருப்பார் என்று சொல்லி இருப்பாங்க என நன்றி கூறுகின்றனர்.
பிறகு பாக்கியா குழந்தைகள் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை நம்ம கிட்ட சொல்ல முடியலனா அது என்னங்க வீடு? நீங்க எந்த தப்பும் செய்யல, அப்புறம் எதுக்கு பயப்படனும் எதையும் தைரியமாக துணிந்து செய்யணும் என அறிவுரை கூறுகிறார். தங்களுடைய குழந்தைகளால் வீட்டில் பிரச்சனைகளை சொல்ல முடியவில்லை என சொன்னதும் அவருடைய பெற்றோர்கள் தலைகுனிந்து நின்றனர்.
அதன்பிறகு வீட்டில் கோபி இனியா உடனே இருப்பதைப் பார்த்து பாக்கியா மகிழ்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.