Baahubali to remade in Gujarathi :
பாகுபலியை ஏன் கட்டப்பா கொன்றார்? இரண்டு ஆண்டுகாலம் ஒட்டுமொத்த இந்தியாவும் கேட்டுக் கொண்டிருந்த கேள்விக்கு பதில் கிடைத்து இன்றுடன் நூறு நாட்கள் ஆகிறது.
ஒரு படத்துக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருக்கும் மாபெரும் ஆச்சரியத்தை பாகுபலி முதல் பாகத்தின் வெற்றியின் மூலம் சாத்தியப்படுத்தியது ராஜமௌலியின்
அணி.
முதல் பாகத்தை மிஞ்சும் பிரம்மாண்டம், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த திரைக்கதை என பாகுபலி இரண்டாம் பாகத்தை கொண்டாட பல காரணங்கள் இருந்தன.
வணிக ரீதியாக இந்திய சினிமாவுக்கான சந்தையை விரிவுப்படுத்தியது மட்டுமல்லாமல் பிரம்மாண்ட சினிமாவுக்கான புது வரைமுறையை வகுத்திருந்தார் ராஜமௌலி.
தெலுங்கு மட்டுமல்ல தமிழ், இந்தி என இந்தியா முழுவதும் இந்த படம் பிரபலம். அப்படி இருந்தும் இப்படத்தை குஜராத்தியில் ரீமேக் செய்ய ஒரு நிறுவனம் தற்போது முன்வந்துள்ளது.
குஜராத்தின் ஃபேமஸான யூ டியூபர்ஸ் இருவர் இதன் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளனர்.