சேலத்தில் கைது செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுனர் மோகன்ராஜின் காம கொடூர லீலைகள் நாளுக்கு நாளுக்கு நாள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
Auto driver mohanraj video is leaked – சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதிதியை சேர்ந்த ஆட்டோ ஒட்டுனர் மோகன்ராஜ். அந்த பகுதியில் ஒரு கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க தலைவராகவும் இருக்கிறார். ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆனவர். ஆனால், இவரின் காம இச்சைக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவர்கள் இருவருமே இவரை விட்டு பிரிந்து விட்டனர். இவர் காக்காபாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் அவர் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இரவு நேரங்களில் தன்னுடன் தனிமையாக ஆட்டோவில் வரும் கல்லூரி பெண்கள் மற்றும் பெண்களுடன் பேச்சு கொடுத்து அவருடன் நட்பாக பழகி, அதன்பின் வீட்டுக்கு வரவழைத்து மிரட்டி அவர்களை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் அதை பதிவு செய்து அவர்களை தொடர்ந்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். அதில் சிலரை நண்பர்களுக்கும் இரையாக்கியுள்ளார். சில பெண்களை பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்தியுள்ளார்.
இவர் மீது ஒரு பெண் கொடுத்த புகாரின் பேரில், சேலம் போலீசார் இவரை கைது செய்துள்ளனர். இவரது செல்போனை சோதனை செய்த போலீசார் பல பெண்களை மிரட்டி அடித்து உதைத்து அவர் பாலியல் பலாத்காரம் செய்த செய்த காட்சிகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 40-க்கும் மேற்பட்ட பெண்களை அவர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.
இவரின் ஒரு வீடியோ சமீபத்தில் வெளியானது. அந்த பெண் குறித்து வாக்குமூலம் அளித்த மோகன்ராஜ், அவர் எனக்கு தெரிந்த பெண். என்னிடம் அடிக்கடி பணம் வாங்குவார். சமீபத்தில் 30 ஆயிரம் பணம் கேட்டார். கொடுக்க முடியாது என்றதால் நானும், அவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவேன் என மிரட்டினார். எனவே, அவரை வீடியோ மூலம் சிக்க வைத்த நான், அவரை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்தேன். அவருக்கு தெரியாமல் அதை வீடியோவும் எடுத்தேன். ஆனால், அதற்குள் வீடியோ வெளிவந்துவிட்டது என வாக்குமூலம் அளித்துள்ளார்.
அந்த வீடியோவில் இருக்கும் பெண் அளித்த புகாரிலேயே மோகன்ராஜ் தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ளார். அதாவது, தனது கணவரை ஓரின சேர்க்கைக்கு மோகன்ராஜ் அழைத்ததாக அப்பெண் புகாரில் கூறியிருந்தார். ஆனால், மோகன்ராஜின் செல்போனை விசாரணை செய்த பின்னரே அவரின் காம கொடூர லீலைகள் போலீசாருக்கு தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.