Atm Cash Withdrawal :
மும்பை: கனரா வங்கி ஏடிஎம்மில் இனி ரூபாய் 10 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால், மொபைல் எண் ஓடிபி கட்டாயம் எனவும், ஓடிபி பதிவு செய்த பிறகே பணம் எடுக்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது எனவும் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக அளவில், கனரா வங்கி ஏடிஎம்மில் இனி ரூபாய் 10 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால், மொபைல் எண்ணிற்கு ஓடிபி அனுப்பப்படும்.
அந்த ஓடிபி எண்ணை பதிவு செய்த பிறகே பணம் எடுக்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது. கனரா வங்கியின் கிளை மேலாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் கனரா ஏடிஎம்மில் ரூபாய் 10 ஆயிரத்திற்கும் மேல் பணம் எடுக்கும் வாடிக்கையாளருக்கு கட்டாயம் மொபைல் போன் கையில் இருக்க வேண்டும் எனவும் விரைவில் இது அமலுக்கு வருவதாகவும் அத்தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல பாரத ஸ்டேட் வங்கியில் ஏடிஎம் மூலமான பணப்பரிவர்த்தனைகளை படிப்படியாக முடிவுக்கு கொண்டு வந்து, மொபைல் ஆப் மூலம் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் அனைத்து பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குனர்கள், தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 5 ட்ரில்லியன் டாலராக உயர்த்துவது, சிறு குறு தொழில் நிறுவனங்கள், பணமில்லா பரிவர்த்தனையில் பாதுகாப்பு குறைபாடுகளை களைதல், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு எளிதாக கடன் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக ஐஓபி வங்கி நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.