Atlee Story Issue : அட்லீ கதை திருடியதை ஒப்பு கொண்டே ஆக வேண்டும் என பிரபல தயாரிப்பாளர் அவரை கடுமையாக சாடி பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படத்தில் இருந்து இது வரை இவர் இயக்கியுள்ள தெறி, மெர்சல் ஆகிய படங்கள் வரை அனைத்துமே இன்னொரு படத்தின் காபி தான் என சர்ச்சையில் சிக்கியுள்ளது.
விஜய் பட டைட்டிலை கேட்ட ரஜினி சிலாகித்து போய் என்ன சொன்னார் தெரியுமா?
குறிப்பாக மெர்சல் திரைப்படம் மூன்று முகம் காபி என ஆணித்தனமாக கூறப்பட்டு வந்தது. ஆனால் அட்லீ அது என்னுடைய கற்பனை கதை தான் என கூறி வந்தார்.
இந்நிலையில் தற்போது மூன்று முகம் படத்தின் ரைட்ஸை வாங்கி வைத்துள்ள ஆடுகளம், ஜிகிர்தண்டா ஆகிய படங்களின் தயாரிப்பாளர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அட்லீயை திட்டி தீர்த்துள்ளார்.
அட்லீ காப்பி அடித்ததை ஏற்று கொள்ள வேண்டும். இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் இது என் கற்பனை என்னுடைய கதை என ஏமாற்றி வருவார்? என சாடியுள்ளார்.