atlee
விஜயை வைத்து பிகில் படத்த இயக்கி முடித்துள்ள இயக்குனர் அட்லீ அடுத்த பாலிவுட்டில் படம் இயக்குப் போகிறார் என்பது தெரியவந்துள்ளது.

ராஜா ராணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான அட்லீ.

அதன் பின் விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என பெரிய பட்ஜெட் படங்களை இயக்கி பெரிய இயக்குனராக வளர்ந்துள்ளார். பிகில் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

atlee2

இந்நிலையில், பிகில் திரைப்படத்திற்கு பின் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானை இயக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

தற்போது இது தொடர்பாக வேறு செய்தி ஒன்றும் வெளியாகியுள்ளது. அட்லி ஷாருக்கானை இயக்குவது உறுதி என்றும், அப்படத்தை ஷாருக்கானின் ‘ரெட் சில்லி’ நிறுவனமே தயாரிப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

அதோடு, இப்படத்திற்கு அட்லீக்கு சம்பளம் ரூ.30 கோடி பேசப்பட்டிருப்பதாகவும், படத்திற்கான ஒப்பந்தத்தில் அட்லீ கையெழுத்து இட்டு விட்டதாகவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

எனவே, தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் அந்தஸ்துக்கு அட்லீ உயர்ந்துள்ளார்.

விரைவில் இப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, ஷங்கர், பிரபுதேவா மற்றும் முருகதாஸ் உள்ளிட்ட சில இயக்குனர்கள் பாலிவுட் ஹீரோக்களை வைத்து அங்கு திரைப்படங்களை இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.