எல்லாம் என் கெட்ட நேரம் நான் பேசினதுக்கு அர்த்தம் அது இல்லை என அஸ்வின் விளக்கமளித்துள்ளார்.

Ashwin Explain About Enna Solla Pogirarai Controversy : தமிழ் சின்னத்திரையில் குக் வித்து கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளவர் அஸ்வின். ஏற்கனவே பல ஆல்பம் பாடல்களில் ஹீரோவாக நடித்துள்ள இவர் முதல் முறையாக என்ன சொல்லப் போகிறாய் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை டிரைடன் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் அஸ்வினுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் நடிக்க குக்கு வித் கோமாளி புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிவாங்கி பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் அஸ்வின் நான் நாற்பது கதைகளைக் கேட்டு தூங்கி விட்டேன் என கூறினார். மேலும் படம் நல்ல வரலைன்னா ரிலீஸ் செய்ய விடமாட்டேன் என சொன்னதாக பேசினார். இவருடைய பேச்சை பார்த்த நெட்டிசன்கள் ஒரு படம் கூட நடிக்கல அதற்குள்ள இவ்வளவு திமிரா என கூறி வந்தனர்.

பத்மாவதி தாயார் கோவில் : இன்று பஞ்சமி தீர்த்தம், நாளை புஷ்ப யாகம்

இந்த நிலையில் தற்போது இதுகுறித்து அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார். எனக்கு திமிர் எல்லாம் கிடையாது. சாதித்த பின்னரும் அந்த திமிர் எனக்கு வராது என கூறியுள்ளார். மேலும் நான் பேசியதை தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள். நான் இயக்குனரிடம் படம் நல்லா வரலைன்னா ரிலீஸ் செய்ய விட மாட்டேன் என்பதை ஜாலியாகத்தான் சொன்னேன். என்னுடைய நண்பர்கள் கூட நான் பேசுவதை இப்படி தவறாக புரிந்து கொண்டு ஏன் என்னை திட்டுற என கேட்டதுண்டு. இப்போதும் அப்படித்தான் நடந்துள்ளது. எல்லாம் என்னுடைய கெட்ட நேரம் என விளக்கம் அளித்துள்ளார். மேலும் பயத்தில் கை கால் நடுங்கிக் கொண்டிருக்கும் போது ஒருவரால் எப்படி திமிராக பேச முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். ‌

ஜெயில் படம் எப்படி இருக்கு? – Stars Review | Arjun Das, Adhik, Ravi Mariya | G.V.Prakash, Abarnathy

மேலும் என்னை பற்றி வந்த மீம்ஸ்கள் தன்னை பாதித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.