இரண்டு முறை கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார் குக்கு வித் கோமாளி பிரபலம்.

Ashwin About Covid19 Affection : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் தொற்று இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது இந்த வைரசால் இரண்டு முறை பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தது குறித்து பேசியுள்ளார் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின்.

கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் குறும்பட ஷூட்டிங்கில் இருந்தேன். திடீரென ஒருநாள் வாசனை தெரியாமல் போனது. அதன் பின்னர் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. கொரானா டெஸ்ட் எடுத்ததில் பாசிட்டிவ் என வந்தது. மருத்துவர்கள் கூறிய மருந்துகளை எடுத்துக் கொண்டேன் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டேன். கிட்டத்தட்ட இருபது நாட்களுக்குப் பிறகுதான் அதிலிருந்து மீண்டு வந்தேன். நல்லவேளை அப்போது என்னுடைய பெற்றோர்கள் என்னுடன் இல்லை என கூறியுள்ளார்.

அதன் பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருந்தேன். அப்போது வழக்கம் போல கொரானா டெஸ்ட் எடுத்தார்கள். மறு நாள் சூட்டிங்கிற்கு வராதீர்கள் என செய்தி வந்தது. ஏன் என்று விசாரித்தால் எனக்கு பாசிட்டிவ் என வந்திருந்தது. பாசிட்டிவாக இருக்க வாய்ப்பே இல்லை என கூறினார். இருந்தாலும் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள்.

நானும் தனிமைப்படுத்திக் கொண்டேன் தினமும் மாலை 6 மணிக்கு அலாரம் வைத்ததை போல தலை வலி வந்துவிடும். இரவெல்லாம் தூங்க விடாமல் ஆட்டி படைக்கும். காலையில் தான் தூக்கம் வரும். அப்போதுதான் இந்த வைரசின் வீரியம் எனக்கு புரிந்தது. சும்மா செய்து போட சாப்பாடு சாப்பிட்டு நல்லாவே இல்லை என சட்டென கூறி விடவோம். 20 நாட்களாக நாம் என்ன சாப்பிடுகிறோம் என தெரியாமல் சாப்பிட்டேன் என கொரானாவில் இருந்து மீண்ட கதையை கூறியுள்ளார் அஸ்வின்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.