Arya and Sayyeshaa : தனது ஆஸ்தான நடிகர் கேட்டுக்கொண்டதற்காக ரீமேக் படத்தை இயக்க சம்மதித்தார் பாலா. ஆனால் அதுவே அவருக்கு கடைசியில் பிரச்சனையாக வந்து முடிந்தது.
ஒருவழியாக அந்த சர்ச்சையில் இருந்து பாலா தற்போது மீண்டு வந்துவிட்டார்.
இதைதொடர்ந்து ஒரு மிரட்டலான படத்துடன் களமிறங்க வேண்டும் என திட்டமிட்ட பாலா, அதற்காக ஆர்யாவுடனும் அதர்வாவுடனும் பேசி வருவதாக நாம் ஏற்கெனவே சொல்லியிருந்தோம்.
இரண்டு நாயகர்களை கொண்ட இப்படத்தில் ஆர்யா ஒரு நாயகனாக நடிப்பது தற்போது உறுதியாகிவிட்டது.
ஏற்கனவே பாலாவின் இயக்கத்தில் நான் கடவுள், அவன் இவன் ஆகிய படங்களில் ஆர்யா நடித்துள்ளார்.
இந்தப் படங்களில் மிகுந்த சிரத்தையுடன் ஆர்யா நடித்த போதிலும் இந்த படங்கள் அவருக்கு பெயர் பெற்றுத் தர தவறியது.
மேலும் இந்த படங்களில் முரட்டுத்தனமான ஒரு தோற்றத்தில் ஆர்யா தோன்றியிருப்பார்.
இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு ஏன் மீண்டும் பாலா இயக்கத்தில் இப்படி ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஆர்யாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.