Arun Vijay Tweet : பிரபல நடிகரான அருண் விஜய் மீண்டும் ஒரு மொட்டையான டீவீட்டை போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். பழம்பெரும் விஜயகுமாரின் மகனான இவர் சில வெற்றி படங்களிலும் நடித்துள்ளார்.
தல அஜித்திற்கு வில்லனாக என்னை அறிந்தால் படத்தில் நடித்துள்ளார். அதே போல் செக்க சிவந்த வானம் படத்திலும் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந் சாமி ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார்.
சமீபத்தில் நடிங்கர் சிவகார்த்திகேயன் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டு இருந்தார்,.
அதன் பின்னர் அந்த ட்வீட் தான் பதிவிடவில்லை எனவும் தன்னுடைய ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு பரபரப்பான டீவீட்டை பதிவிட்டுள்ளார். அந்த டீவீட்டில் இதுவும் கடந்து போகும், காலம் பதில் சொல்லும் என பதிவிட்டுள்ளார்.
இப்படி எதை பற்றிய ட்வீட் என்பதை குறிப்பிடாமல் மொட்டையாக ட்வீட் செய்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்கார் படத்திற்கும் அதிமுக கட்சிக்கும் இடையே நடந்து வரும் மோதலை பற்றி குறிப்பிட்டு இருக்கலாம் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மற்றொரு தரப்பினர் இம்முறையும் உங்களது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதா ? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Idhuvum kadandhu Pogum.. Kaalam badhil sollum!!
— ArunVijay (@arunvijayno1) November 9, 2018