யானை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விஜயுடன் கைகோர்க்கிறார் அருண் விஜய்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவரது நடிப்பில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து இறுதியாக ஹரி இயக்கத்தில் வெளியான யானை திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது.
கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இந்த படம் 32 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அருண் விஜய் அடுத்ததாக இயக்குனர் ஏ எல் விஜய் அவர்களுடன் இணைந்து பணியாற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. இதனால் அருண் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.