கமல் மற்றும் சூர்யா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு பதிவு செய்துள்ளார் அர்ஜுன் தாஸ்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அர்ஜுன் தாஸ். தமிழ் சினிமாவில் கைதி என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது விக்ரம் படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் தன்னை தொடர்பு கொண்டு பேசியபோது ஒரு காட்சியில் நடிக்க வேண்டும் என கேட்டதும் ஒரே காட்சிதானே என நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் சூட்டிங்கில் ஒரு பக்கம் கமல் சார் மறுபக்கம் சூர்யா சார் என இருக்கும் போது அவர்களுக்கிடையே நடிப்பது என்பது சிரமமாக இருந்தது. நடிப்பில் கவனம் செலுத்துவதை காட்டிலும் திரும்பத் திரும்ப இவர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை தான் இருந்தது.

இப்படி ஒரு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்த கமல் சாருக்கு நன்றி. சூர்யா சாருடன் இணைந்து நடிப்பது கௌரவம் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியானதும் ரசிகர்கள் பலரும் இந்தக் கதாபாத்திரம் குறித்து கேட்டனர். ஆனால் அப்போது என்னால் பதில் சொல்ல முடியாத நிலையில் இருந்தேன். தற்போது அது குறித்து கேட்டால் லைப் டைம் செட்டில்மெண்ட் என சொல்லுவேன் என கூறியுள்ளார். ரசிகர்கள் கேட்டபோது பதில் சொல்ல முடியாத காரணத்திற்காக தற்போது அவர்களுடன் அர்ஜுன் தாஸ் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.