நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அர்ஜுன் சிதம்பரத்திற்கு மிக பெரிய படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் அர்ஜுன் சிதம்பரம்.
அர்ஜுன் சிதம்பரத்தின் நடிப்பு பாராட்டும் வகையில் அமைந்திருந்தது, இதனையடுத்து தற்போது அவருக்கு மிக பெரிய படத்தில் வாய்ப்பு கிடைத்திருப்பதாக கூறியுள்ளார்.
ஆம், மணிரத்தினம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க தான் ஒப்பந்தமாகி உள்ளாராம். சிறிய ரோல் தான் என்றாலும் இவ்வளவு பெரிய படத்தில் நடிப்பதே பெருமையாக கருதுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.