Archery Sangam :
இந்திய வில்வித்தை சங்கத்தில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் இருந்து வந்தது. இதனால் தேர்தலை டெல்லியிலும், சண்டிகரிலும் நடத்த முடிவு செய்தனர். இதனால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்த விவகாரம் கோர்ட்டில் உள்ளது.
இதற்கிடையே தேர்தலை சரியான முறையில் நடத்தாவிடில், இந்திய வில்வித்தை சங்கம் சஸ்பெண்ட் செய்யப்படும்.
உலகளவிலான தொடரில் பங்கேற்க இயலாது என்று உலக வில்வித்தை அமைப்பு எச்சரித்தது. தேர்தல் குறித்த விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் கால அவகாசம் கேட்கப்பட்டது.
விஷால் மோசமான ஆள், பல பெண்களின் வாழக்கையை சீரழித்தவர் – சர்ச்சை நடிகை பரபரப்பு ட்வீட்.!
இதை தொடர்ந்து உலக வில் வித்தை அமைப்பு இந்திய வில் வித்தை அமைப்பிற்கு கடந்த மாதம் 31-ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்தது.
ஆனால் அந்த தேதிக்குள் தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் உலக வில்வித்தை அமைப்பு இந்திய வில்வித்தை சங்கத்தை சஸ்பெண்ட் செய்துள்ளது.
ஆகஸ்ட் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை மாரிட்டில் நடைபெறும் இளைஞர்களுக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய கொடியுடன் வீரர்கள் கலந்து கொள்ளலாம். அதன்பின் தனிநபர் பிரிவில் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.