வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் யாரும் இந்தியாவிற்கு வர கூடாது என வசைபாடிய பெண்ணிற்கு அறந்தாங்கி நிஷா பதிலடி கொடுத்துள்ளார்.
Aranthangi Nisha Latest Video : கரோனா வைரஸ் உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸை கட்டுப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வெளிநாட்டில் இருந்த இந்தியர்களும் இந்தியா வந்தடைந்தனர். இதுபோன்றே இந்தியா வந்தவர்களை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார் பெண்மணி ஒருவர்.
அதாவது அந்தப் பெண்மணி இங்கு வந்து நோய் பரப்ப வர்றீங்களா? அங்கேயே செத்து தொலைய வேண்டியது தானே உங்களுக்காகவும் உங்க குடும்பத்துக்காகவும் நாங்க நோய் வாங்கிகிட்டு சாகணுமா? என்றெல்லாம் கண்டபடி பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து அறந்தாங்கி நிஷா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் அந்த பெண்மணிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை திட்ட உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது அருகதையும் கிடையாது. அவர்கள் பணத்திற்காக ஒன்றும் வெளிநாடு செல்லவில்லை.
தன்னுடைய பிள்ளைகள் கஷ்டப்பட்டு விடக் கூடாது, அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமைத்துத் தர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சென்றார்கள்.
வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்பதால் அவர்கள் ஒன்றும் பெரிய நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள் பெரிய அளவில் சம்பாதிக்கிறார்கள் என்று இல்லை. அங்கேயும் கஷ்டப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
தனிமையில் தினம் தினம் தன் குடும்பத்தை நினைத்து வருந்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களை வரக்கூடாது என சொல்ல உங்களுக்கு எந்த அருகதையும் கிடையாது. அவர்களும் நன்றாக இருக்க வேண்டும் நாமும் நன்றாக இருக்க வேண்டும்.
வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் இந்தியாவிற்கு பாதுகாப்பாக வந்து சேரவேண்டும் என கூறியுள்ளார்.