Aranmanai 3 movie dubbing completed

சுந்தர் சி யின் அரண்மனை 3 படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால்.

Aranmanai 3 movie dubbing completed : தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி.இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் அரண்மனை. இந்தப் படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதனை அடுத்து அரண்மனை 2 பாகம் முடிவடைந்த நிலையில், அரண்மனை3 தயாராகி வருகிறது. இப்படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், யோகி பாபு, விவேக் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

கொரோனாவால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி இருக்கிறது.

இந்நிலையில் சாக்ஷி அகர்வால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் டப்பிங் வேலையை முடித்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அரண்மனை ஒன்று மற்றும் இரண்டாம் பாகங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அரண்மனை 3 குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.