Anupama Pathak Commits Suicide : போஜ்பூரி பிரபல சின்னத்திரை நடிகை அனுபமா பதக்.
இவர் பீகார் மாநிலம் புர்னியாவை சேர்ந்தவர்.. சீரியலில் நடித்து வருவதால், மும்பையில் தஹிசர் என்ற பகுதியில் தங்கி வந்தார்.
இவர் மரணத்திற்கு முன்பு கடைசியாக மூச்சு விடாமல் பத்து நிமிடம் ஃபேஸ்புக்கில் லைவ் பேசி விட்டு பின்பு கிச்சனுக்கு போய் தூக்கு போட்டு தற்கொலை செய்து விட்டார் நடிகை அனுபமா.
அந்தப் பதிவில் கூறியதாவது: நம்மளுடைய எந்த பிரச்சனையும் நம்முடைய தோழிகள் உறவினர்கள் என்று யாரையும் நம்பி அதை சொல்லக்கூடாது. அப்படி சொன்னா அதுல அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம் தான் இருக்கும் நமக்காக அவங்க பரிதாப பட மாட்டாங்க. ஏனென்றால் நாம் செத்தா கூட உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல. என்று மன ஒழுக்கத்துடன் அந்த வீடியோவில் அனுபமா பேசியுள்ளார்.
அவர் பேசியபோது நடுராத்திரி 12 மணி.. குட்பை, குட்நைட் என்று சொல்லிவிட்டு போனவர், அப்படியே கிச்சனுக்கு போய் தூக்கு போட்டு தற்கொலையும் செய்து கொண்டுள்ளார்.2 நாள் கழித்துதான் இவர் இறந்ததே தெரியவந்துள்ளது.
தற்கொலைக்கு முன்பு வீடியோ போட்டு பேசியவர், ஒரு லெட்டரையும் எழுதி வைத்துள்ளார். அதில், பணப்பிரச்சனையால்தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளார்.
மனிஷ் ஜா என்பவர் இவரது டூவீலரை எடுத்து கொண்டு போய்விட்டாராம்.. அதையும் சொல்லி அந்த லெட்டரில் சொல்லி உள்ளார். இப்போது விசாரணை நடந்து வருகிறது. தொடர்ந்து பாலிவுட்டில் சின்னத்திரை, சினிமா நடிகர், நடிகைகள் தற்கொலைகள் செய்து கொண்டு வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்து வருகிறது.