Another Central Minister Affected in Corona : மத்திய உள்துறை அமைச்சருக்கு கொரோனா தோற்று எதிரொலியால் அமித் ஷாவை சந்தித்த மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
கொரோனா பாதிப்பு உறுதியானதுமே மத்திய அமைச்சர் அமித்ஷா டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்க என்று மருத்துவர்கள் விரைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
அதே நேரத்தில் அமித்ஷா பங்கேற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா தடுப்பு நெறிமுறைகள் முழுவதுமாக கடைபிடிப்பதால் பிரதமர் மோடி உள்ளிட்ட மற்ற அமைச்சர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை.
இதுகுறித்து மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ தனது ட்விட்டர் பக்கத்தில், மாண்புமிகு அமைச்சர் ஒரு நாள் முன்பு மாலை சந்தித்தேன். எனது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து விலகி அடுத்த சில நாட்களுக்கு விரைவில் ஒரு சோதனை செய்யப்பட வேண்டும் என்று டாக்டர்களால் அறிவுறுத்தபட்டிருக்கிறேன்.
விதிகள் மற்றும் நெறிமுறையின் படி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் பின்பற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் .