ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Announcement of Thalaivar 169 : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இறுதியாக அண்ணாத்தை என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தான் நடிக்க இருக்கிறார் என சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று மதியம் இன்று மாலை 6 மணிக்கு புதிய அறிவிப்பு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி தற்போது அந்த அறிவிப்பு என்ன என தெரியவந்துள்ளது.
அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படமான தலைவர் 169 படத்தை பீஸ்ட் படத்தை இயக்கியுள்ள நெல்சன் திலீப் குமார் இயக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த கூட்டணி வெற்றி பெற அவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.