இந்தியில் அந்நியன் திரைப்படம் ரீமேக் ஆக உள்ள நிலையில் லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.
Anniyan Hindi Remake Issue : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் அந்நியன்.
படம் வெளியாகி பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இந்த படத்தில் ரன்வீர் சிங் நடிக்கயிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இப்படியான நிலையில் தற்போது அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் இயக்குனர் ஷங்கர் மற்றும் அண்ணியன் இந்தி ரீமேக்கை தயாரிக்கவுள்ள தயாரிப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில் எழுத்தாளர் சுஜாதாவிடம் முழு பணத்தை கொடுத்து அந்நியன் படத்தின் உரிமையை நான் வாங்கி விட்டேன். அப்படி இருக்கையில் என் அனுமதி இல்லாமல் எப்படி இந்தியில் இந்தப் படத்தின் கதையை ரீமேக் செய்ய முடியும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதனால் அந்நியன் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக இருப்பது கேள்விக்குறியாகி உள்ளது.