திருமணம் குறித்து பதிவு செய்து ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்.
Anitha Revealed Marriage Secrets : தமிழ் சின்னத்திரையில் பிரபல செய்தி வாசிப்பாளராக வலம் வருபவர் அனிதா சம்பத். இவருக்கு கடந்த ஞாயிற்று கிழமை திடீரென திருமணம் நடைபெற்றது.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பலரும் ரகசிய திருமணமா? என கேள்வி எழுப்ப தொடங்கினர். தற்போது அதற்கு இன்ஸ்டாவில் பதிலளித்துள்ளார் அனிதா.
இது திடீர் திருமணம் அல்ல, காதல் திருமணம் தான், அதுவும் பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன் நடந்த திருமணம். நான் முகநூலை அவ்வளவாக பார்ப்பதில்லை. எனக்கு திருமணம் என நான் கடந்த மாதமே பதிவிட்டேன். என்னுடைய கணக்கு பிளாக் ஆகி விட்டது. அது ஏன் என தெரியவில்லை.
எனக்கு திருமணத்தை ஆடம்பரமாக செய்து கொள்ள விருப்பமில்லை. அதனால் தான் குடும்பத்தாரின் முன்னிலையில் சிம்பிளாக செய்து கொண்டோம். நான் வெளிப்படையாக திருமணம் என கூறி இருந்தால் யூ ட்யூப் சேனல்கள் எல்லாம் வந்து விடுவார்கள் என கூறியுள்ளார்.