தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தொலைக்காட்சிகளில் பணிபுரிந்து வருபவர் அனிதா. இவர் தற்போது இந்த வேலையிலிருந்து விலகி உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் கலந்து கொண்டுள்ளார்.
Anitha Parents Interview About Bigg Boss : பிக் பாஸ் வீட்டுக்குள் அனிதாவுக்கும் மொட்டை அங்கிள் சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய இருவருக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பிரபல பத்திரிக்கை ஒன்று அனிதாவின் பெற்றோரை தொடர்பு கொண்டு பேட்டி எடுத்து உள்ளது.
அந்தப் பேட்டியில் அனிதாவின் அப்பா அனிதாவுக்கு இப்போதைக்கு ரேகா மேடம் துணையா இருக்கிறது கொஞ்சம் ஆறுதலா இருக்கு என கூறியுள்ளார்.
மேலும் நானும் சினிமா துறையில் இருந்தாலும் என்னுடைய உதவியால் அனிதா முன்னுக்கு வரல. அவளுடைய சொந்த முயற்சியால் தான் இன்று இந்த நிலைக்கு வந்துள்ளார்.
அனிதாவுக்கு எதையும் மூடி மறைக்க தெரியாது. பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் அவங்க அம்மா மடியில் படுத்துக்கொண்டு எல்லாத்தையும் சொல்லிடுவா என கூறியுள்ளார்.
அதே போல் அனிதா தன் அம்மாவின் கலர் குறித்துப் பேசியது குறித்து கேட்டபோது அதற்கு அவருடைய அம்மா ஆமா நான் கருப்பா இருக்கிறதால சில கலர் உடைகளை போடவே மாட்டேன். ஆனால் என் பொண்ணு உன் கலருக்கு எல்லாமே அழகா இருக்கும்மா என என்னை சமாதானப்படுத்தி விடுவார் என்று பேசியுள்ளார்.
மேலும் என்னுடைய கணவர் மாப்பிள்ளை பிக்பாஸ் வீட்டுக்குள்ள அனிதா போக சம்மதம் சொல்லிட்டாரா என கேட்ட பிறகு தான் இதற்கு சம்மதித்தார் எனவும் தெரிவித்துள்ளார்.