குளத்தின் மேல் வெள்ளை நிற ஆடையில் அமர்ந்து கொண்டு ஜில்லு போஸ் கொடுக்கும் அனிகா சுரேந்திரன் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய அனிகா சுரேந்திரன் தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான அஜித்தின் “என்னை அறிந்தால்” என்ற படத்தில் திரிஷா-அஜித் அவர்களின் மகளாக நடித்து அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் தங்கையாக “மிருதன்” திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார். அதன் பின்னர் விசுவாசம் படத்தில் மீண்டும் அஜித் மற்றும் நயன்தாரா அவர்களின் மகளாக நடித்திருந்தார். ஆனால் தற்போது கதாநாயகியாக நடிக்க ஆர்வம் காட்டி வரும் அனிகா சுரேந்திரன் சில ஷார்ட் பிலிமில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஆகையால் வெள்ளி திரையிலும் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையால் அவ்வப்போது வித்தியாசமான உடைகளில் போட்டோ ஷூட் செய்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார். அதேபோல் தற்போது வெள்ளை நிற ஆடையில் குளத்தில் அமர்ந்து கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவது மட்டுமின்றி இணையத்தில் வைரலாகியும் வருகிறது.