அஜித் யாருக்கும் தெரியாமல் உதவி செய்து வருவதாக சொல்வதெல்லாம் சுத்த பொய் என அங்காடித்தெரு படம் நடிகை அளித்துள்ள பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Angadi Theru Actress About Ajith : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். சினிமாவில் நடிப்பது மட்டுமே தன்னுடைய வேலை என எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. அரசியல் சார்ந்த பிரச்சனைகளில் இப்போதும் தலையிடாமல் தனித்து இருந்து வருகிறார்.
மேலும் அஜித் வறுமையில் வாழம் மக்கள் பலருக்கு யாருக்கும் தெரியாமல் உதவிகள் செய்து வருவதாக பிரபலங்கள் சொல்லி நாம் கேட்டுள்ளோம்.
இப்படியான நிலையில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடித்தெரு படத்தில் நடித்தவர் சிந்து.
இவர் ரேணிகுண்டா படத்தில் நடித்திருந்த தீப்பெட்டி கணேசன் என்பவர் வாழ்க்கை நடத்த பணமில்லாமல் அவதிப்பட்ட போது முதல் ஆளாகச் சென்று உதவியுள்ளார்.
தற்போது இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உதவி கேட்டு வரும் இவர் பேட்டி ஒன்றில் அஜித் சார் யாருக்கும் தெரியாமல் உதவி செய்துவருவதாக சொல்வதெல்லாம் சுத்த பொய்.
அவர் உதவி செய்தால் செய்தார் என சொல்லலாம். தீப்பெட்டி கணேசன் அவர்கள் வறுமையில் வாடியபோது அவருடைய பக்கத்திலிருந்து என அனைத்தையும் பார்த்துள்ளேன்.
உதவி கேட்ட ஸ்டன்ட் மாஸ்டர்.. அடுத்த நொடியே அஜித் செய்த செயல் – பலரையும் நெகிழ வைத்த உண்மை சம்பவம்.!!
அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திரா அவர்களை தொடர்பு கொண்டு உதவி கேட்டபோது அஜித் கெஸ்ட் ஹவுஸில் இருக்கிறார் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.
அதன் பிறகு நடிகர் போஸ் வெங்கட்டின் மனைவியின்ம்னன மூலமாக அஜித்தை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அப்போதும் எங்களுக்கு அதே பதில்தான் கிடைத்தது என தெரிவித்துள்ளார்.
தீப்பெட்டி கணேசன் அவர்களுக்கு அஜித் இவ்வளவு உதவி செய்தார் அவ்வளவு உதவி செய்தார் என வெளியான தகவல் அனைத்தும் பொய் தான் என கூறியுள்ளார்.
உண்மையில் லாரன்ஸ் மாஸ்டர், கவிஞர் சினேகன் ஆகியோர் தான் உதவி செய்தார்கள் என தெரிவித்துள்ளார்.