ஆண்ட்ரியாவுடன் உடலுறவு வைத்து ஏமாற்றியவர் யார்? என்ற கேள்வி சமூக வளையதளங்களில் வலுக்க தொடங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகையாக, பாடகியாக, ஒரு நல்ல டேன்சராக வலம் வருபவர் ஆண்ட்ரியா. சமீப காலமாக படங்களில் தலை காட்டாமல் இருந்து வந்த ஆண்ட்ரியா மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
மேலும் ஏன் இந்த இடைவெளி என்பதற்கும் அவர் பதிலளித்திருந்தார். அதாவது தான் திருமணமான ஒருவருடன் உடல் ரீதியான உறவில் இருந்ததாகவும் அவர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் கூறி சலசலப்பை ஏற்படுத்தினார்.
அதுமட்டுமில்லாமல் அவர் யார் என்பதை உடைந்த சிறகுகள் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.
அந்த புத்தகத்தை நேற்று வெளியிட இருந்தார். ஆனால் நேற்று வெளியாகவில்லை. இதனால் இன்று வெளியாகுமா? அந்த நபர் யார் என்ற கேள்விகள் சமூக வளையதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன.