முடியாது என சொல்லியும் கட்டாயப்படுத்தி பாட வைத்தார்கள் என ஊ சொல்றியா மாமா பாடல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் ஆண்ட்ரியா.

Andrea About O Solriya Mama : தென்னிந்திய சினிமாவின் நடிகை பாடகி என பன்முகத் திறமைகள் வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் பல்வேறு படங்களில் பாடியுள்ள பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அப்படி மிகுந்த வரவேற்பைப் பெற்ற பாடல் தான் ஊ சொல்றியா மாமா.

அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்றிருந்த இந்த பாடலுக்கு நடனமாடி இருப்பார். இந்தப் பாடலையும் சமந்தாவின் நடனத்தையும் பார்க்கவே எக்கச்சக்கமான கூட்டம் படத்துக்கு சென்றது. இந்த பாடலை ஆண்ட்ரியா தான் பாடியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது முதலில் இந்தப் பாடலைப் பாடுமாறு என்னை அணுகிய போது முடியாது என கூறிவிட்டேன். ஆனால் நீங்கள்தான் பாட வேண்டும் என என்னை கட்டாயப் படுத்தினார்கள். பிறகு யோசித்து சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு சில நாட்கள் கழித்து ஓகே என கூறி இந்த பாடலை பாடினேன். ஆனால் இந்த பாடல் இந்த அளவுக்கு வெற்றி பெறும் என நான் எதிர்பார்க்கவில்லை, மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார் ஆண்ட்ரியா.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.