Anchor DD About Nayanthara
Anchor DD About Nayanthara

நயன்தாராவுக்கு மட்டும் கோபம் வந்தால் என்ன நடக்கும் என்பதை டிடி லைவ் வீடியோ சாட்டில் கூறியுள்ளார்.

Anchor DD About Nayanthara : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலமாக பல வெள்ளித்திரை பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தல அஜித்தை பேட்டி எடுக்க வேண்டும் என்பதே தன்னுடைய இறுதி ஆசை எனவும் அவர் கூறியுள்ளார்.

நரகத்திற்கு போனால் கூட இப்படித்தான் இருக்கணும் – புகைப்படத்தை வெளியிட்டு ஆசையைக் கூறிய லாஸ்லியா!

பெரும்பாலான முன்னணி நடிகர், நடிகைகளுடன் நட்பாக இருந்து வருகிறார். இதனால் பலரைப் பற்றியும் அவருக்கு தெரியும். சுமார் 20 வருடங்களாக தன்னுடைய தொகுப்பாளினி பணியை மேற்கொண்டு வருகிறார்.

இதனால் இவருக்கு வெள்ளித்திரை பிரபலங்களுக்கு இணையாக ரசிகர்கள் உண்டு. சமீபத்தில் இன்ஸ்டாகிராம் மூலமாக டிடி ரசிகர்களுடன் லைவ் வீடியோவில் பேசியுள்ளார்.

அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு டக்கு டக்குவென பதில் அளித்துள்ளார். நயன்தாராவைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் கூறுங்கள் என ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.

கணவருடன் சண்ட வரும்.. ஆனா அவர் இத கொடுத்தே சமாதானப்படுத்திடுவாறு.. – உண்மைகளை ஓப்பனாக சொன்ன ரம்பா!

அதற்கு டிடி அவருக்கு கோபம் வந்தால் உடனே போன் செய்து என்ன பிரச்சனை எனக்கு இதெல்லாம் பிடிக்கல என ஓப்பனாக கூறி விடுவார். மனதில் எதையும் வைத்துக் கொள்ள தெரியாதவர். அவரிடம் எனக்குப் பிடித்தது அது தான் என கூறியுள்ளார்.

அதே போல் இன்னொரு ரசிகர் திரிஷாவை பற்றி ஓரிரு வார்த்தை சொல்லுங்கள் எனக் கேட்டதற்கு மை லைப் மை ரூல்ஸ் என போய்க் கொண்டே இருப்பவர். எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் அவர் கவலைப்பட மாட்டார் என கூறியுள்ளார்.

மேலும் டிடி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். இவர் பேசிய பேச்சுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

மேலும் இவர் நேற்று மிட் நைட்டில் வெளியிட்டிருந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

சன் லைட்டில் நன்றாக இருந்தது அதுதான் புகைப்படம் எடுத்து வெளியிட்டேன் என கூறி மேலாடை இல்லாதது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் டிரஸ் இல்லையா என கேள்வி எழுப்பி வந்தனர்.

மேலும் மிட் நைட்ல சன் லைட்டா?? என்ன கதை விடுறீங்க எனவும் கிண்டலடித்து வந்தனர்.