மீனாவால் அஜித்துக்கு பொது மேடையில் ஏற்பட்ட அசிங்கம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Anantha Poongatre Incident : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இன்று அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கும் நடிகைகள் எக்கச்சக்கம்.
ஆனால் அஜித் வளர்ந்து வந்த சமயத்தில் அவருக்கு வெற்றி கொடுத்து விருது வாங்கித் தந்த திரைப்படம் ஆனந்த பூங்காற்றே.
இந்த படத்திற்காக அஜித் விருது வாங்கிய போது அந்த விழா மேடையில் மீனாவுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆட முடியுமா என தொகுப்பாளர் கேட்டார்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக மீனாவின் அம்மா மேடைக்கு வந்து என் மகள் ரஜினி கமலுடன் நடித்தவர் உன்னோடு நடனமாடினால் பொருத்தமாக இருக்காது எனக் கூறி அவரை அழைத்துச் சென்றார்.
ஆனால் அஜித் இந்த பிரச்சனையை எல்லாம் மறந்து மீனாவுடன் மீண்டும் சிட்டிசன் போன்ற படங்களில் இணைந்து நடித்திருந்தார்.
இதுபோன்ற சம்பவத்தினால் தான் அஜித் எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை.