பிகில் படத்தை இன்று வரை பார்க்கவில்லை. எனக்கு இந்த படம் வலியை தான் கொடுத்தது என அதிர்ச்சியை கிளப்பியுள்ளார் பிரபல நடிகர்.
தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கி இருந்தார்.
இப்படத்தில் யோகி பாபு, ஆனந்த ராஜ், நயன்தாரா என பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்தை பற்றி ஆனந்த ராஜ் பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நான் நடித்த பல காட்சிகள் கட் செய்யப்பட்டு விட்டன, நான் என்ன வசனம் பேசினேன் என்பது கூட வெளியில் தெரியவில்லை. இதனால் இப்படம் எனக்கு வலியை தான் கொடுத்தது.
அதனாலேயே இன்று வரை நான் இந்த படத்தை பார்க்கவில்லை என கூறியுள்ளார். படம் ரிலீசான போதும் ஆனந்த ராஜை படத்தில் பயன்படுத்தவே இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.