கொரோனா வைரஸால் தல அஜித்தின் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடல் புத்துயிர் பெற்றுள்ளது.
Amarkalam Movie Song Remake : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து மீள அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் தனது அமர்க்களம் படத்தில் செஞ்சிக் கோட்டையின் உச்சியில் நின்று சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் மூச்சு விடாமல் பாடிய பாட்டை தற்போது ஏற்றி நிலைக்கு ஏற்றவாறு ரீமேக் செய்து உள்ளனர்.
இது குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது
கட்டாயம் இல்லாத தனிமை கேட்டேன்..
ரத்தத்தின் என்னென்றும் நெகட்டிவ் கேட்டேன்..
ஆன்ட்டி வைரஸ் தடுப்பூசி கேட்டேன்..
திணறல் இல்லாத வைத்தியம் கேட்டேன்..
மாஸ்க் இல்லாத முகங்கள் கேட்டேன்..
கொரோனா இல்லாத உலகம் கேட்டேன்..
பறந்து செல்ல விமானம் கேட்டேன்..
பாஸ் இல்லாத பயணம் கேட்டேன்..
செவிலியர் முகத்தில் சிரிப்பை கேட்டேன்..
காய்ச்சல் எல்லாம் குறையக் கேட்டேன்..
வெள்ளித்திரையில் சினிமா கேட்டேன்..
உலகுக்கெல்லாம் நிம்மதி கேட்டேன்..
ஊருக்கெல்லாம் வேக்சின் கேட்டேன்..
மக்களுக்கெல்லாம் வேலைகள் கேட்டேன்..
அத்தனை பேருக்கும் ஆரோக்கியம் கேட்டேன்..
பள்ளி வகுப்பில் பயிலக் கேட்டேன்..
ஹாஸ்டலில் ஒருநாள் வசிக்கக் கேட்டேன்..
கேன்டீன் டீயை ருசிக்கக் கேட்டேன்.. என அப்பாடல் நீண்டு கொண்டே செல்கிறது.
தற்போதைய சூழ்நிலைக்கு இப்பாடல் கச்சிதமாக பொருந்துவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அஜித் ரசிகர்கள் இந்த பாட்டை ஆரவாரத்தோடு ஷேர் செய்து வருகின்றனர்.