Amala Paul about Real Love
Amala Paul about Real Love

இந்த உலகில் காதல் அர்த்தமற்றுப் போய்விட்டது, பெண்கள் படுக்கை சுகத்திற்காக மட்டுமே பயன்படுத்தப் படுகிறார்கள் என நடிகை அமலாபால் பதிவிட்டுள்ளார்.

Amala Paul about Real Love : கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தற்போது ஊரடங்கு உத்தரவு தான் அமலில் இருந்து வருகிறது.

அனைத்து துறைகளும் முடங்கியுள்ளதால் பெரும்பாலானோர் வீடுகளிலேயே இருந்து வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் மருந்துக்கடைகளில் ஆணுறையை அதிக அளவில் விற்பனை ஆனதாக ஆரம்பித்தில் தகவல்கள் வெளியாகின. பெண்கள் கூட கூச்சமில்லாமல் ஆணுறைகளை வாங்கி செல்வதாக பல கடைக்காரர்கள் கூறியிருந்தனர்.

இது தவறான முடிவுனு நினைக்கிறேன், சாந்தனு பதிவிட்ட ட்வீட் – தப்பான தகவலை பரப்பாதீர்கள் என கூறும் ரசிகர்கள்.!

இந்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் 7 மில்லியன் பெண்கள் கர்ப்பம் அடைந்து உள்ளனர். இதுகுறித்து நடிகை அமலாபால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரபரப்பு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதாவது உலகம் முழுவதும் பெண்கள் படுக்கை சுகத்துக்கு மட்டும் தான் பயன்படுத்துகிறார்கள். இந்த உலகில் காதல் அர்த்தமற்றுப் போய்விட்டது. ஆண்கள் பெண்களின் வலியில் பங்கேற்பதில்லை. அதனை புரிந்து கொள்வதுமில்லை.

காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்திருந்தால் இவ்வளவு பேர் கர்ப்பம் அடைந்திருக்க மாட்டார்கள். உலகம் முழுவதும் இனத்தைப் பெருக்கும் தொழிற்சாலைகள் ஆகவே பெண்கள் இருந்து வருகிறார்கள். என பதிவிட்டுள்ளார் அமலாபால்.