பாவம் என் பொண்ணு, அவளுக்கு இரண்டு வயசு தான் ஆகுது என தன்னுடைய மகள் அழுவதைப் பார்த்து கண்கலங்கி உள்ளார் ஆல்யா மானசா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் நடன நிகழ்ச்சி மூலமாக அறிமுகமாகி அதன் பின்னர் ராஜா-ராணி-சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பெரிய இடம் பிடித்தவர் ஆல்யா மானசா. இந்த சீரியலில் நாயகனாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஐலா மற்றும் அர்ஷ் குழந்தைகள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. தங்களது வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு தருணத்தையும் யூடியூபில் வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இரண்டு வயதாகும் ஐலாவை தனியார் பள்ளி ஒன்றில் சேர்த்துள்ளனர். குடும்பத்தோடு சென்று ஐலா பாப்பாவை பள்ளியில் விட்டு வர கிளாசிக் போன குழந்தை அப்பா அம்மாவைத் தேடி அழுகிறது.
தன்னுடைய மகள் அழுவதைப் பார்த்த ஆலியா அவர் ரொம்ப பாவம் இரண்டு வயது தான் ஆகுது என கண் கலங்கி அழ அவரை சமாதானம் செய்து உள்ளார் சஞ்சீவ். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக குழந்தைகள் ஸ்கூலுக்கு செல்லும் ஆரம்பத்தில் இப்படித்தான் இருப்பார்கள் அதன்பிறகு பழகிக் கொள்வார்கள் என கூறி வருகின்றனர் வீடியோவை பார்த்த ரசிகர்கள்.