மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி எப்போது என ரசிகர்கள் கேள்விக்கு ஆல்யா மானசா பதிலளித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஆலியா மானசா.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த சீரியல் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கவர்ந்திழுத்த ஆளியார் இதில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு ஒரு குழந்தையை பெற்றெடுத்த இவர் மீண்டும் ராஜா ராணி சீரியல் சீசன் 2வில் நடிக்க தொடங்கினார். இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தால் பிரசவத்திற்காக இந்த சீரியலில் இருந்து விலகிக் கொண்டார்.
இந்த நிலையில் இவர் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடிய போது மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி எப்போது என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதாவது தற்போது பிரசவத்தின் காரணமாக உடல் எடை கூடிவிட்டேன் மீண்டும் நடிக்க வேண்டும் என்றால் எடையை குறைக்க வேண்டும். அதற்காக சாப்பாட்டை குறைக்க வேண்டும்.
ஆகையால் சில மாதங்கள் ஓய்வெடுத்து விட்டு பின்னர் உடல் எடையை குறைத்து சீரியலில் நடிக்க தொடங்குவேன் என தெரிவித்துள்ளார். சின்னத்திரை எம்பி குறித்து ஆலியா கொடுத்த பதில் ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.