புஷ்பா பாடல் சர்ச்சைக்கு அல்லு அர்ஜுன் விளக்கம் அளித்துள்ளார்.

Allu Arjun Reply to Pushpa Song Controversy : தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் தான் புஷ்பா. இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்தப் படத்தில் சுகுமார் என்றனர் இயக்க அல்லு அர்ஜுன், பகத் பாஸில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஐட்டம் பாடலுக்கு ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு சமந்தா நடனம் ஆடியிருந்தார். இந்த பாடல் ஆண்களை காமக் கொடூரர்களாக சித்தரிப்பதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அல்லு அர்ஜுன் இது பற்றிய கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்.

உலக பேட்மிண்டன் போட்டி : ஸ்ரீகாந்த்-சிந்து செம குஷி..

அதாவது அவர் சிரித்துக்கொண்டே அந்த பாடல் வரிகள் உண்மைதானே என கூறியுள்ளார். இதனையடுத்து பேசிய தயாரிப்பாளர் தாணு இன்னைக்கு இந்த பாடல் சர்ச்சையை சந்தித்தாலும் படம் வெளியான பிறகு இது தேசிய கீதம் போல் அனைவரிடமும் ஒலிக்கும் என கூறியுள்ளார். ஆண்களை ஆபாசமாக சித்தரிக்கும் பாடலை தேசிய கீதத்துடன் ஒப்பிடுவதா என்ற சர்ச்சை வெடித்துள்ளது.

என் பிள்ளை Vijay நல்லா இருக்க காரணம் இதான் – மேடையில் SAC ஓபன்டாக்…!