தளபதி விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் தொடங்கிய அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியின் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
All India Vijay Makkal Iyakkam : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தளபதி விஜய். விரைவில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் தளபதி விஜய் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் தேர்தல் ஆணையத்தில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியை பதிவு செய்தார்.
கட்சி தொடங்கியதாக தகவல் வெளியான சில மணி நேரங்களிலேயே தளபதி விஜய் அறிக்கை வெளியிட்டு எனக்கும் அந்தக் கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, என் ரசிகர்கள் அக்கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
விஜயின் அறிக்கையைத் தொடர்ந்து இந்த கட்சியின் செயலாளராக பதவி வகித்து அவரின் அம்மா ஷோபா சந்திரசேகர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
இப்படியான நிலையில் மாநில தலைவராக பதவி வகித்து வந்த திருச்சி ஆர்.கே ராஜா ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
எஸ். ஏ சந்திரசேகர் கட்சி தொடங்கிய நாள் முதலே குழப்பம் நீடித்து வந்த நிலையில் தற்போது இவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதனைப் பார்த்த சமூக வலைதள வாசிகள் விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் கட்சி தொடங்கிய நேரமே சரியில்லை போல என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.