Suresh Chandra Request to Fans :
‘அஜித்’… இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கும்.
இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும்.
திரைத்துறையில் எந்தவித பின்புலமுமின்றி அறிமுகமாகி இன்று தனது விடா முயற்சியால் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியிருக்கிறார் அஜித்.
இவருடைய வளர்ச்சிக்கு பின்னணியில் இவருக்கு பக்கபலமாக இருப்பவர் இவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா. இவர் தற்போது தனது தாய் குறித்து உருக்கமாக தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சூப்பர் டீலக்ஸ் ஷில்பாவுக்கு அஜித் தான் இன்ஸ்பிரேஷன் – இயக்குனரின் அதிரடி கருத்து!
வயது முதிர்வு மற்றும் உணவு ஒவ்வாமை காரணமாக கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் சுரேஷ் சந்திராவின் தாயார் சத்யா, தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், தனது தாயின் பிறந்தநாளான நேற்று (ஜூன்.6), தனது தாயுடனான நினைவுகளை உணர்வுப்பூர்வமான பதிவின் மூலம் பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில்,’ பெண்கள் ஒருவரை சார்ந்து வாழக் கூடாது என்ற பெண்ணியவாத எண்ணமும், திருமணத்திற்கு பிறகும் படிப்பதில் உள்ள அதீத ஆர்வத்தினால் இளம் தலைமுறையினருக்கு முன் உதாரணமாகவும்,
பக்தி பழமையானவராக இருந்தாலும் அவரது முற்போக்கான சிந்தனைகள் எனக்கு முரண்பாடகவே இருந்தது’.
பிரபல நடிகையிடம் ஹாய் சொல்ல நீண்ட நேரம் காத்திருந்த விஜய் – இதுவரை வெளிவராத தகவல்!
‘எனக்கு சுவாசம் தந்த இந்த மேகத்துக்கு இன்று (ஜூன்.6) பிறந்தநாள். அம்மாவின் உடல் நலிவுற்று இருக்கும் இந்த வேளை தூக்கமின்றி, மான் அமைதியின்றி தவிக்கிறோம்.
எனக்கு திருமண பந்தத்தின் மீது இருந்த அச்சமே மாமியார் மருமகள் உரசல் தான். அதை என் அம்மாவும், மனைவியும் எனக்கு தராததற்கு நன்றி.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலும், அவர் நாடுவது என் மனைவியின் அருகாமையை தான்.’
கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும், அம்மா குணமடைய வேண்டும் என பிரார்த்திக்க நினைக்கிறேன். காரியத்துக்காக கடவுளை வேண்டினால் கோபித்துக் கொள்வாரோ என்ற பயம் இருக்கிறது.
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், கடவுளை வணங்க தகுதியானவர்கள் எனது தாய் நலம் பெற அவரது இஷ்ட தெய்வமான ஸ்ரீ கிருஷ்ணரை பிரார்த்திக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.