நடிகர் அஜித் வெளியிட்டுள்ள அறிக்கை வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் மத்தியில் தல என்று அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் தல அஜித் குமார். இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் உருவாக்கி வரும் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இப்படம் குறித்த அப்டேட்கள் மற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வரும். ஆனால் தற்போது எப்போதும் பொது இடங்களில் எதுவும் பேசாமல் ஒதுங்கி இருந்த நடிகர் அஜித் திடீர் என்று வெளியிட்டு இருக்கும் அறிக்கை வைரலாகி வருகிறது.

அதில் அவர், உங்களை சுற்றி நெகட்டிவிட்டியோ டிராமாவோ இல்லாத நபர்களை வைத்து கொள்ளுங்கள். ஊக்கப்படுத்தக்கூடிய இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். பொறாமைக்கோ, வெறுப்புக்கோ நேரமில்லை. உங்களது சிறப்பான பணியை மட்டும் கைவிடாதீர்கள். அன்புடன் அஜித் என்று அவர் ரசிகர்களுக்கு அன்போடு வெளியிட்டு உள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.