ஏர்போர்ட்டில் பாதுகாவலரை பார்த்ததும் அஜித் செய்த வேலை அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் அடுத்ததாக துணிவு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் பாங்காங் செல்கின்றனர். இதற்காக அஜித் பேங்காங் செல்வதற்காக ஏர்போர்ட் சென்றுள்ளார்.
அங்கு பாதுகாவலர்களை பார்த்ததும் அவர்களுக்கு சலியூட் அடித்துள்ளார் அஜித். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் அஜித்தை பாராட்டி வருகின்றனர்.