Ajith Fans Helps to Puducherry Peoples

பசித்தால் எடுத்துக் கொள் என்ற பெயரில் அஜித் ரசிகர்கள் செய்துவரும் செயல் அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது. ‌‌

Ajith Fans Helps to Puducherry Peoples : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவருக்கென உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இவரது ரசிகர்கள் இக்கட்டான சூழ்நிலைகளில் மக்களுக்கு உதவுவது வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது பரவிவரும் கொரானா வைரஸ் காரணமாக புதுச்சேரியில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீடில்லாமல் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் அஜித் ரசிகர்கள் பசித்தால் எடுத்துக்கொள் என்ற பதாகையுடன் ‌ தள்ளு வண்டியில் சாப்பாடு, வாட்டர் பாட்டில், பிஸ்கட், பழங்கள் ஆகியவற்றை வைத்து சாலையோரத்தில் வைத்துள்ளனர்.

அஜித் ரசிகர்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.