Ajith contributed 25 Lakhs To The Tamil Nadu Chief Minister’s Relief Fund

YouTube video

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் இந்த வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிதீவிரமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க தங்களால் முடிந்த நிதி அளிக்குமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் பலரும் முதல்வரின நிவாரண நிதிக்கு பணம் அனுப்பி வருகின்றனர். ஏற்கனவே நடிகர் சூர்யா ஒரு கோடி அளித்திருந்த நிலையில் தற்போது தல அஜித் அவர் ரூபாய் 25 லட்சம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ரசிகர்கள் பலரும் தல அஜித்துக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் அஜித் ரசிகர்கள் இந்த தகவலை சமூக வலைதளப் பக்கங்களில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.