கொரானா நிவாரணம் வழங்குவதில் அஜித்-விஜய் வேறு ரூட்டில் பிளான் போட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Ajith and Vijay Plan About Corona Contribute : சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. இதுவரை 4300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதனை கட்டுப்படுத்தவே 21 நாட்களுக்கு இந்தியாவை முடக்கி வைத்துள்ளது மத்திய அரசு. மேலும் மக்களிடம் நிவாரண நிதி அளிக்குமாறும் கேட்டு வருகிறது.

திரையுலக பிரபலங்கள் பலரும் நிதி அளித்து வரும் நிலையில் அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்கள் தொடர்ந்து மவுனம் காத்து வருகின்றனர்.

இதனால் இவர்களின் ரசிகர்களே வருத்தத்தில் இருந்து வருகின்றனர். தமிழ் திரையுலகை சேர்ந்த பெப்சி நேரடியாக அஜித்-விஜய் தொடர்பு கொண்டு உதவி கோரலாம் என திட்டமிட்டுள்ளது.

வீட்டிலேயே இருந்து உலகத்தை காப்பாற்ற வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது.. மிஸ் பண்ணிடாதீங்க – ரசிகர்களுக்கு மீனா அறிவுரை

இதற்காக அஜித் தரப்பில் அணுகிய போது அவர் தற்போது உடல் நலம் குன்றிய அவரது தந்தையுடன் இருந்து வருவதாகவும் விரைவில் அவர் நிவாரணம் வழங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்க்கு மத்திய மாநில அரசுகளுக்கிடையே தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதால் அவர் தன்னுடைய ரசிகர்கள மன்றங்கள் மூலமாக உதவ திட்டமிட்டுள்ளாராம்.

இதற்காக ரூபாய் 25 கோடி வரை அவர் நிதி ஒதுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. கேரள பெருவெள்ளம் பிரச்சினை போதும் விஜய் இப்படித்தான் உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.