Ajay Singh Win Gold Medal :
அபியா: காமன்வெல்த் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் 81 கி.கி., எடைப்பிரிவில் இந்தியாவின் அஜய் சிங் தங்கம் வென்றார்.
சமோவா நாட்டின் தலைநகர் அபியாவில், காமன்வெல்த் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது.
இதில் ஆண்களுக்கான 81 கி.கி., எடைப்பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் அஜய் சிங், மொத்தம் 338 கி.கி., (‘கிளீன் அண்டு ஜெர்க்’ பிரிவில் 190 கி.கி., மற்றும் ‘ஸ்னாட்ச்’ பிரிவில் 148 கி.கி.,) பளுதுாக்கி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
இது, இவரது சிறந்த செயல்பாடாக அமைந்தது. இதற்கு முன், கடந்த ஏப்ரல் மாதம் சீனாவில் நடந்த ஆசிய பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் தொடரில் 320 கி.கி., (142 + 178 கி.கி.,) பளுதுாக்கியது இவரது அதிகபட்சமாக இருந்தது.
இந்தியா விளையாட்டு துறை உலகளவில் தடம் பதித்த ஆண்டு 2018
இப்பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரர் பபுல் சங்மாய், வெள்ளி வென்றார். இவர், மொத்தம் 313 கி.கி., (135+178 கி.கி.,) பளுதுாக்கினார்.
மற்ற எடைப்பிரிவு போட்டிகளில் விளையாடிய இந்தியாவின் அனுராதா (ஆண்கள் 87 கி.கி.,), ஆர்.வி. ராகுல் (ஆண்கள் 89 கி.கி.,) முறையே தங்கம், வெள்ளி வென்றனர்.