நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது நடிகை நயன்தாரா பாணியில் படங்களை தேர்வு செய்து நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய திரை உலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நயன்தாரா. இவர் சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வரும் நயன்தாரா விரைவில் நடிப்பில் இருந்து விலகப் போவதாக தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் அவரிடத்தை பிடிப்பதற்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முயற்சி செய்து வருவதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுப்பாக பேசப்பட்டு வருகிறது. அதற்கேற்றார் போல் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நயன்தாரா பாணியில் தன்னிடம் கதை சொல்ல வரும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் படத்தில் தனக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்று கூறி வருகிறாராம். இதனால் நடிகை ஐஸ்வர் ராஜேஷ் நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளாக தேர்வு செய்து நயன்தாரா இடத்தை பிடிப்பதற்கு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.