விஜய் தேவரகொண்டா பெயரை நம்பி ஏமாந்து போயுள்ளார் ஆண்ட்ரியா. இதுபற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Aishwarya Rajesh About Andrea : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவரது நடிப்பில் அடுத்ததாக பிசாசு 2 திரைப்படம் உருவாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு நேற்று தான் வெளியானது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகை ஆண்ட்ரியா விஜய்தேவரகொண்டா பெயரை நம்பி ஏமாந்து போனதாக தெரிவித்துள்ளார்.
அதாவது விஜய்தேவரகொண்டா நடிக்கவுள்ள வெப்சீரிஸ் தொடர் ஒன்றில் நீங்கள் நடிக்க வேண்டும் என குழு ஒன்று அவரை அணுகியுள்ளது. ஆனால் இந்த குழு முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் ஆண்ட்ரியாவிற்கு சந்தேகம் எழுந்துள்ளது.
தொடையை காட்டியபடி எக்கச்சக்க கவர்ச்சியில் ஐஸ்வர்யா தத்தா – வைரலாகும் புகைப்படம்.!!
இதனையடுத்து அவர் என்னிடம் இது குறித்து கூற இது பற்றி விசாரித்தோம். அப்போது தான் தெரிந்தது அது ஒரு ஏமாற்று கும்பல் என தெரிவித்துள்ளார்.
இதே போல் எனக்கும் நடந்துள்ளது என கூறியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ். அதாவது தன்னிடம் அசிஸ்டெண்டாக வேலை செய்த ஒருவர் தனக்கு தெரியாமல் பணம் வாங்கிக் கொண்டு தன்னைப் பற்றிய தகவல்களை வெளியிட்டதாக தெரிவித்துள்ளார்.
அவர் ஒன்றரை வருடத்திற்கு மேலாக தன்னிடம் வேலை செய்ததால் அவர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.