அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோர் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களது குடும்பத்தில் மேலும் இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Aishwarya Rai and Daughter Tested COVID 19 Positive : வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது.
பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும் தற்போது மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிவித்திருந்தார்.
அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு கொரானா உறுதி – மற்றவர்களின் நிலை என்ன.?
இவரைத் தொடர்ந்து அவரின் மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரானா இருப்பது உறுதியானது. அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு கொரானா தொற்று இல்லை என்பது பரிசோதனையின் முடிவில் தெரிய வந்தது.
ஆனால் அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மகள் ஆரத்தியாவுக்கும் கொரானா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து இவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.