டிசம்பர் 1 முதல் கட்டணத்தை ஏர்டெல் நிறுவனம் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜியோ நெட்ஒர்க்கின் வருகையால் இந்தியாவில் கோலோச்சி கொண்டிருந்த நெட்ஒர்க்குகள் வாடிக்கையாளர்களை இழக்க தொடங்கியது.
ஜியோவின் வருகையால் ஏர்செல் நிறுவனம் சுத்தமாக காணாமல் போனது. BSNL நிறுவனம் அழிவின் தருவாயில் உள்ளது.
தற்போது ஏர்டெல், வோடோபோன் நிறுவனங்கள் மட்டுமே ஜியோக்கு போட்டியாக செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில் தான் ஜியோ நிறுவனம் மற்ற நெட்ஒர்க் மொபைல்களுக்கு பேச நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்திருந்தது.
இதனையடுத்து தற்போது ஏர்டெல் நிறுவனமும் தங்களுடைய காம்போ பேக்களின் மீதான கட்டணத்தை உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேலும் புதிய கட்டண முறை டிசம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.