Airaa Movie : தளபதி 63 படத்திற்கும் நயன்தாராவின் ஐரா படத்திற்கு இடையே ஒரு தொடர்பு இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
தளபதி விஜய் தற்போது தன்னுடைய 63-வது படமாக அட்லீ இயக்கி வரும் தளபதி 63 என்ற பெயரிப்படாத படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நயன்தாரா விஜயுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
அதே போல் நயன்தாரா நடித்து வரும் ஐரா படம் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவிற்கு 63-வது திரைப்படமாகும்.
இந்த படத்தை கே எம் சர்ஜூன் இயக்கி வருகிறார். கே.ஜி.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் இருந்து மேகதூதம் என்ற சிங்கிள் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது இயக்குனர் இந்த பாடலை பற்றி சில தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்த பாடல் ஏன் ‘பவானியின் கீதம்’ என்று கூறப்படுகிறது என்பதை இயக்குனர் கே எம் சர்ஜூன் விளக்கும் போது, “இந்த பாடலை ஏற்கனவே கேட்டவர்கள் எளிதாக இதை கண்டுபிடித்திருப்பார்கள் என நம்புகிறேன்.
‘பவானி’ என்ற கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தும் பாடல். அவளுடைய கனவுகள், அபிலாஷைகள், தனக்கு பிடித்த ஆன்மாவுடனான மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கைக்காக ஏங்குவது போன்றவற்றை வெளிப்படுத்தும் படல்.
பத்மப்ரியா ராகவன், தாமரை, சுந்தரமூர்த்தி ஆகியோரின் சிறப்பான முயற்சிகளை பாராட்டுகிறேன். ஸ்லோ பாய்ஸனாக ரசிகர்கள் மனதில் இறங்கிக் கொண்டிருக்கும் இந்த அழகான பாடலை கொடுத்த மூவரையும் பிரித்து பார்க்க முடியாது.
தாமரை எப்பொழுதும் உணர்ச்சிகளின் அமுதம், அவரின் பாடல் வரிகள் மூலம் நிபந்தனையற்ற அன்பின் மேன்மையை உயர்த்துவார். பாடல் உருவாக்கும்போது சுந்தரமூர்த்தி பாடல் வரிகளும், குரலும் மிக தெளிவாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனம் செலுத்தினார்.
இதனால் மென்மையான இசையை இழை விட்டிருந்தார், அது தான் பாடலில் தாக்கத்தை தீவிரப்படுத்தியது. பாடலில் வெற்றிக்கு பத்மப்ரியா ராகவனின் பங்கும் மிக முக்கியமானது. காட்சிகளும், பாடலின் சூழ்நிலையும் மற்றும் நயன்தாராவின் பிரம்மாண்டமான திரை ஆளுமையும் பாடலுக்கு கூடுதல் மைலேஜாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.