AIADMK relief material for Cyclone Gaja – கஜா புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு, பல கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து நிவாரண உதவிகள் தமிழகம் முழுவதும் இருந்து வந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில், விழுப்புரம் வடக்கு, தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி நேற்று மாலை விழுப்புரத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தெற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி மூலம் 150 டன் அரிசி மூட்டை, வேட்டி சேலை, போர்வை, தண்ணீர் பாக்கெட், பாய், பிஸ்கட், ரொட்டி, சோப்பு, மெழுகுவர்த்தி என 15 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்க சுமார் ஒன்றரை கோடி ரூபாய் நிவாரண பொருட்கள் 23 லாரிகள் மூலமாக நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் தண்டபாணி, ஆவின் தலைவர் பேட்டை முருகன், சங்கரபாணி எம்.எல்.ஏ, ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், முத்தமிழ்செல்வன், மணிராஜ், ராஜசேகர், ராஜேந்திரன், பழனி, துரை, முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.