AIADMK Questions to Stalin : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. தொற்றுநோய், புயல், வெள்ளம், மழை என அனைத்து பேரிடர் நேரத்திலும் சிறப்பான செயல்பாடுகளால் மக்களின் நலனை பாதுகாத்து வருகிறது.
கொரானா பேரிடர் காலத்தில் முதலீடுகளை ஈர்த்து இந்திய அளவில் தமிழகம் பொருளாதாரத்தில் பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது. மேலும் வேலைவாய்ப்பின்மை விகிதம் 0.5 சதவீதமாக குறைந்துள்ளது.
தற்போது இது குறித்து பிரபல பத்திரிக்கை ஒன்று புள்ளி விவரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் வேலையின்மை விகிதம் 49.8 சதவீதமாக உயர்ந்துள்ளதாக பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் தற்போது அதிமுக தங்களது ட்விட்டர் பக்கத்தில் இந்த பத்திரிக்கையின் செய்தியை பதிவிட்டு அரசியல் பிழைப்புக்காக நீங்கள் கூறும் ஒவ்வொரு பொய்யையும் தோலுரிக்கின்றன, புள்ளி விபரங்கள்!
49.8 % வேலையின்மை என்று பொய்யுரைத்தீர்கள். இன்று 5 ஆண்டுகளில் குறைவான 0.5% என்கிறது புள்ளி விவரங்கள்.